Wednesday, June 9, 2010

கண்ணி தீவு பார்ட் த்ரீ

Alternative Title = கண்ணி தீவு பார்ட் த்ரீ அல்லது மருத்துவரின் பிறந்த நாளும் - காத்திருந்த கதையும்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

இன்று உயர்திரு மருத்துவர் ஐயா அவர்களின் பிறந்த நாள் ஆகும். இன்று (அட்லீஸ்ட் இன்றாவது) தமிழ் காமிக்ஸ் உலகின் கிங் விஸ்வா அவர்கள் ஒரு பதிவை இடுவார் என்று எண்ணி காலையில் இருந்து காத்திருந்து கடுப்பாகி விட்டதால் வேறு வழி இல்லாமல் இந்த பதிவு.

உண்மையில் நான் இட எண்ணி இருந்த பதிவானது மாடச்ச்தி கதையின் இரண்டாவது மற்றும் இறுதி பாகமாகும்.அந்த அதியற்புத கதையின் ஆரம்ப பகுதியை படிக்க கீழ்க்காணும் அட்டைப்படத்தினை அமுக்கவும், ஐ மீன், கிளிக் செய்யவும்.

படித்து முடித்தாயிற்றா? ஒக்கே, அடுத்து நடக்கப் போவது என்ன?

மாடச்தியின் நிலை என்ன ஆயிற்று?

மர்ம உளவாளி உண்மையில் யார்?

மாடஸ்தி உடைகளை கழட்டும் "அந்த" சீன எப்போது வரும்?

மொரோக்கோ இளவரசி என்ன ஆனார்?

என்று பல கேள்விகளுக்கு பதில் தெரிய பல கோடி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கையில் இன்று அந்த இரண்டாம் பகுதியை வெளியிட தயாராக இருக்கையில் நண்பர் இவ்வாறாக சதி செய்து விட்டார். வேறுவழி இல்லாமல் நான் இந்த ஸ்மால் பதிவை இடுகிறேன். நண்பர்கள் மன்னித்தருள்க.

Iniya Udhayam 1st Sept 1995 

சரி, இந்த கதைக்கும் இந்த பதிவிற்கும் இன்னும் என்ன சம்பந்தம் என்று புரியாத புதிய வாசகர்களுக்கு மட்டும் இந்த பத்தி: மற்றவர்கள் ஸ்கிப் செய்து விட்டு அடுத்த பத்திக்கு செல்லலாம்.

பல வருடங்களாக பதிவிடாமல், விரைவில், விரைவில் என்றே சொல்லி காலம் தள்ளி வரும் நம்ம கிங் விஸ்வா கூட அந்த காட்டில்தான் இருக்கிறாராம். அடுத்த பதிவிட காத்திருக்கிறாராம். என்ன கொடுமை சார் இது?

ஒக்கே, இந்த நல்ல நாளில் நம்ம பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை சொல்லி விடை பெறுவோம்.

Happy Birth Day, Doctor 7.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Related Posts with Thumbnails