மக்கள்ஸ்,
சாவு வீட்ல சன் மியூசிக் பாக்குற மாதிரி நல்ல இருக்குற நம்ம தமிழ் காமிக்ஸ் உலகத்துல கொஞ்சம் அதிகமாக ஆசைப்பட்ட ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகனின் கற்பனையே இந்த பதிவு. கொஞ்சம் ஆசை, கொஞ்சம் பேராசை இரண்டும் சேர்ந்த கலவை தான் இந்த பதிவு.
இங்கே பக்கத்துல தலை வாங்கி கையில கத்தியோட வெட்ட காத்திருக்கிறது யார தெரியுமா? நம்மள மாதிரி காமிக்ஸ் ரசிகர்களைத்தான். என்னடா இது சவுக்கு தோப்பு சங்கீதக் கச்சேரில சவுண்ட் எஃபக்ட் கம்மின்னு கம்ப்ளைன்ட் பண்ற மாதிரி இருக்கேன்னு பாக்குறீங்களா? பதிவை முழுசா படிங்க. பின்னாடி தெரியும்.
தலை வாங்கி ஃபீவர்: கடந்த ஒரு மாதமாகவே தமிழகம் முழுவதும் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதுமாக தலை வாங்கி எங்கே? தலை வாங்கி எப்போ வரும்? என்று ஒரு கதறலாக இருந்தது. அந்த கதறலை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நேற்று முதல் அனைவருக்கும் காமிக்ஸ் கிளசிக்ஸ் லேட்டஸ்ட் இதழ் தலை வாங்கி குரங்கு அனுப்பப் பட்டு இருக்கிறது. எனக்கும் வந்து விட்டது. ஆனால் பதிவிட வேண்டாம் என்று நண்பர் இரவுக் கழுகு கேட்டுக் கொண்டதின் விளைவாக அமைதியாக இருந்தேன். இப்போது கூட தலைவர் முத்து விசிறியின் இந்த பதிவை பார்த்து விட்டே ஆதங்கத்துடன் இந்த பதிவினை இடுகிறேன்.
நம்ம எடிட்டர் சார் மிகவும் நேர்த்தியாக காரணங்களை கூறினாலும் கூட தலை வாங்கியை கலரில் சந்திக்கவே ஆவல். பின்னே என்னங்க, கர்ணன் படமே மேம்படுத்தப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக தூள் கிளப்பும்போது தலை வாங்கிக்கு என்ன குறைச்சல்? ஒரு வேலை எடிட்டர் சார் தலை வாங்கியை கலரில் வெளியிட்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற அதீத கற்பனையின் விபரீத விளைவே இந்த பதிவு:
தலை வாங்கிக் குரங்கின் முதல் பக்கம் - முழு வண்ணத்தில் வந்திருந்தால் எப்படி இருக்கும்?
எடிட்டர் சார் இப்படி பதிவிட்டதால் கலகக் குரல் கிளம்பி விட்டதாக நினைத்து விடாதீர்கள். இந்தப் பதிவுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்த காரணத்தை உங்கள் பார்வைக்கு முன்வைக்கவே இந்த பதிவு.
தமிழ் காமிக்ஸ் வியாபாரிகள்: கடந்த பல ஆண்டுகளாக (தேங்க்ஸ் டு கிங் விஸ்வா மற்றும் அவரது பதிவுகள்) காமிக்ஸ் பற்றிய ஆர்வமும் puththaga சேகரிப்பும் அனைவரிடமும் தொற்றிக்கொண்டு விட்டது. அதனை சில புல்லுருவிகள் காமிக்ஸ் ரசிகர்கள் என்கிற பெயரில் தவறாக உபயோகிக்க ஆரம்பித்தார்கள். முதலில் அவர்கள் செய்தது டெக்ஸ் வில்லர் கதையாகிய இருளின் மைந்தர்கள் கதையை கலரில் நாங்கள் அச்சிட்டுள்ளோம், விலை ஐந்தாயிரம் ரூபாய்தான் என்று சில காமிக்ஸ் வெறியர்களை தூண்டில் போட்டு கொக்கியில் பிடித்ததுதான். நல்ல கவனியுங்க, வித்தவங்க மேல் தப்பு சொல்லல, வாங்குனவன் மேலேயும் தப்பு சொல்லல. ஆனால் அப்படி கலர் காமிக்ஸ் பற்றிய ஒரு வெற்றிடம் இருப்பதால் இந்த காமிக்ஸ் வியாபாரிகள் அதனை சிறப்பாக உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் வருகின்ற வேளையில் கூட இதே கும்பல் ஒரு காமெடி வேலையை செய்ய நினைத்தது. நல்லவேளையாக டாக்டர் செவனின் புண்ணியத்தில் அந்த வேலை அதோகதியாக அந்தரத்திலேயே நின்று விட்டது.இவர்களே நடுவில் இனிமேல் லயன் காமிக்ஸ் வராது என்றெல்லாம் கதை கட்டி விட்டதை அனைவரும் அறிவார்கள்.
இப்போது இவர்கள் செய்யும் பணி என்னவென்றால் லயன் காமிக்ஸ் இதழ்களில் எதெல்லாம் ரீபிரின்ட் ஆகிறதோ, அவற்றை எல்லாம் கலரில் ருபாய் ஐந்தாயிரம் என்று விற்று விட ஒரு பெரிய பிளான் போட்டு வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதன் முதல் கட்டமே இந்த தலை வாங்கி குரங்கு கதையின் கலர் பிரின்ட்.
ஆமாம், இன்றுதான் எனக்கு தெரிய வந்தது. தலை வாங்கி குரங்கை ருபாய் ஐந்தாயிரம் கொடுத்தால் கலரில் படிக்கலாம். முழு புத்தகமும் கலரில் உள்ளது என்று ஒரு பெரிய மார்கெட்டிங் கும்பல் கிளம்பியுள்ளது. வாசகர்கள் ஜாக்கிரதை.
எடிட்டர் சாருக்கு ஒரு வேண்டுகோள்: சார், தயவு செய்து அடுத்து நீங்கள் வெளியிடவுள்ள டெக்ஸ் வில்லர் கதையை நீங்களே கலரில் வெளியிட்டு விடுங்களேன்? இந்த மாதிரி அத்தனைக்கும் ஆசைப்படுகிற எங்களை மாதிரி காமிக்ஸ் ரசிகர்கள் பலியாகாமல் இருப்போமல்லவா?
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.