Thursday, November 18, 2010

முத்து விசிறியும், இயக்குனர் பிரபு சாலமனும் மற்றும் ஆனந்த விகடனும் - ஒரு சிறப்பு முன்னோட்டம்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

வழக்கமாக தமிழ் காமிக்ஸ் உலகில் முன்னோட்டங்கள் என்றால் அது புத்தகம் குறித்தோ அல்லது வெளியீடு குறித்தோ இருக்கும். பலரும் வர இருக்கும் புத்தகங்களின் அட்டைகளை பற்றி பதிவிட்டு இருக்கிறார்கள். கிங் விஸ்வாவோ ஒரு படி மேலே போய் அடுத்து வர இருக்கும் புத்தகத்தின் ஹாட் லைனின் ஒரு பகுதியை பற்றி முன்னோட்டப்பதிவு இட்டு இருக்கிறார். ஆனால் இங்கு நாம் இடப்போகும் முன்னோட்டப்பதிவு சற்றே வித்தியாசமானது.

ஆம், காமிக்ஸ் நியூஸ் என்ற பெயரில் வழமையாக கிங் விஷ்வாவும், பயங்கரவாதி டாக்டர் செவனும் காமிக்ஸ் குறித்த செய்திகளை வெளியிடுவார்கள். அந்த வகையில் வரப்போகும் காமிக்ஸ் நியூஸ் குறித்த முன்னோட்ட பதிவு இது: ஆமாம், நாளை வர இருக்கும் ஆனந்த விகடன் இதழில் காமிக்ஸ் குறித்த ஒன்றல்ல, இரண்டு செய்திகள் வர இருக்கின்றன.

 தகவல் ஒன்று: முத்து விசிறியின் காமிக்ஸ் வலைத்தளம் - விகடன் வரவேற்பறையில் வழமையாக விகடன் வரவேற்பறை பகுதியில் ஒரு வலைத்தளம், ஒரு புத்தகம், ஒரு குறுந்தகடு என்று பல நல்ல விஷயங்களை மக்களுக்கு அறிமுகம் செய்வார்கள். அந்த வகையில் விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் நம்முடைய தமிழ் காமிக்ஸ் உலகின் இணையதள மாமன்னர், ஈடிணையற்ற பேரரசர் திரு முத்துவிசிறி அவர்களின் தளம் குறித்து அறிமுகம் உள்ளது. இதோ அந்த அறிமுகம்:

MF

கம்பியூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷனும் வந்த பிறகு காணாமல் போன பால்ய காலத்து சந்தோஷங்களில் ஒன்று காமிக்ஸ். இங்கு தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் ஸ்கான் செய்யப்பட்டு வலையேற்றப்பட்டு இருக்கின்றன. ஆங்கில காமிக்ஸ்களின் கதை சுருக்கமும் தரப்பட்டு இருக்கின்றது. காமிக்ஸ் புத்தகங்களின் சந்தை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை சுவாரஸ்யம். நினைவுகளில் புதைந்து போன ஸ்பைடர் (மேன்?!?), இரும்புக்கை மாயாவி இங்கு உலவிக்கொண்டு இருப்பது ஆச்சர்யம்.

என்ன, அவ்வளவு தூரம் சொல்லி இருந்தும் மக்களால் ஸ்பைடர் என்பது வேறு, ஸ்பைடர்மேன் என்பது வேறு என்பதை இன்னமும் தெரிந்துகொள்ளவில்லை. இருக்கட்டும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த முத்து விசிறி அவர்களின் வலைதளத்தை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்: முத்து விசிறியின் முத்தான வலை தளம்

தகவல் இரண்டு: விகடனின் மற்றுமொரு வித்தியாசமான பகுதி 16 பிளஸ். இந்த பகுதியில் பல சுய முன்னேற்ற கட்டுரைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நான் (சோ எண்டு சோ ) ஆனது எப்படி என்று ஒரு பிரபலம் தான் எப்படி பிரபலம் ஆனார் என்று கூறுவார். அப்படி இந்த வாரம் மைனா பட இயக்குனர் பிரபு சாலமன் தன்னுடைய வாழ்க்கையை பற்றி கூறுகையில் கீழ்க்காணும் வரிகள் வருகின்றன.

Prabhu-Solomon

நான் பிரபு சாலமன் ஆனது எப்படி: "சின்ன வயசு நினைவுகளில் முத்து காமிக்ஸ் மட்டுமே பளிச்சுன்னு ஞாபகத்தில் இருக்கு. இரும்புக்கை மாயாவியின் சாகசங்கள் என்னை வேறு உலகத்தில் உலாவ செய்யும்" என்று ஆரம்பிக்கும் அந்த கட்டுரை அவரின் பால்ய காலத்து நினைவுகளில் ஆரம்பித்து அவரது சமீபத்து படமாகிய மைனா வரை வந்து முடிகிறது.

இப்படியாக இந்த மாதிரி காமிக்ஸ் விஷயங்களை அடிப்படையாக கொண்டு இரண்டு செய்திகளை தாங்கியவாறு ஆனந்த விகடன் நாளை கடைகளில் விற்பனைக்கு வருகிறது. படிக்க தவறாதீர்கள்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Friday, October 1, 2010

எந்திரனும் இரும்புக்கை மாயாவியும் அல்லது எந்திரன் (ஐ.எஸ்.ஓ. 9001 தரச்சான்று பெற்ற ஒரே காமிக்ஸ் விமர்சனம்)

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

நம்முடைய சென்ற சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளாகிய (தமிழ் காமிக்ஸ் உலகில் சிங்கம்) மற்றும்   (தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா) மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது நினைவிருக்கும். அதனால் இனிமேல் அதனைப்போலவே சில பல பதிவுகளை இடலாம் என்று பலரும் கூறி இருந்தனர். குறிப்பாக கோவையிலிருந்து மருத்துவர் திரு கந்தசுவாமி அவர்கள் கொடுத்த வரவேற்பே இந்த பதிவின் மூலக்காரணம். அவருக்கு எங்கள் நன்றிகள்.

இன்று இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த "எந்திரன்" என்ற படம் ரிலீஸ் ஆகி உள்ளது.  எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை வந்துள்ள ரோபோ மற்றும் இயந்திர மனிதர்களை பற்றிய தொடர் பதிவை நம்முடைய பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டார் (கம்ப்யூட்டர் மனிதன்).

நானும் நம்முடைய பங்கிற்கு இந்த படத்தை இன்று காலை முதல் நாள் முதல் காட்சியாக கண்டு ரசித்தேன் (உபயம்: நண்பர் கிங் விஸ்வா). படத்தை பார்பதோடில்லாமல் இலவசமாக ஜூஸ், பாப் கார்ன், சிக்கன் பப் மற்றும் சிப்ஸ் உடன் (அனைத்துமே இலவசம் என்பது வேறு விஷயம்) படத்தை ரசித்தேன். அந்த படத்தை பார்க்கும்போது எனக்குள்ளே சில காமிக்ஸ் சிந்தனைகள் ஊற்றெடுத்து சிறகடித்து பறந்தன. ஆம், அந்த சிந்தனைகளை அலசவே இந்த பதிவு. படத்தின் விமர்சனம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். ஆனால், காமிக்ஸ் பற்றியும் அதில் உள்ள ஒற்றுமைகளை பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அது சரி, காமிக்ஸ் சம்பந்தம் உண்டு என்று சொல்கிறீர்களே, எந்த காமிக்ஸ் கதையுடன் என்று கேட்டால்? இதோ பதில்: இரும்புக் கை மாயாவி. ஆம், தமிழ் காமிக்ஸ் உலகின் மறக்கமுடியாத கதாபாத்திரமாக விளங்கும் இரும்புக்கை மாயாவி கதாபாதிரதிர்க்கும் இந்த எந்திரன் பாதிரதிர்க்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இனி அவற்றை விரிவாக அலசுவோம்:

முதல் ஒற்றுமை:

SteelClawVanishing 10_thumb1 Minnal Mayavi - Cover

வழக்கமாக இரும்புக்கை மாயாவியின் உடலில் மின்சாரமோ அல்லது மின்னலோ பாய்ந்தால் அவரது உடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்து அவரின் உடல் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்துவிடும்.  அவரது இரும்புக்கை மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதைப்போலவே இந்த எந்திரன் படத்திலும் விஞ்ஞானி ரஜினி தன்னுடைய ரோபோவாகிய சிட்டிக்கு உணர்சிகளை கொண்டுவர முயற்சி செய்கிறார். அப்போது எதுவுமே பயன்படாதபோது, ஒரு மின்னல் தாக்கி அந்த ரோபோவிடம் சில பல மாற்றங்கள் நடந்து அந்த ரோபோவிற்கு உணர்சிகள் வந்துவிடுகிறது. அதற்க்கு பிறகு தான் கதையே அட்டகாசமாக துவங்குகிறது. ஆகையால், இந்த முதல் ஒற்றுமை ஓக்கேவா?

இரண்டாம் ஒற்றுமை:

MuthuComics176SummerSpecialStory41 Steel claw MuthuComics167KanneerTheevilMayaviAd[2]

இரும்புக்கை மாயாவியின் சிறப்பு ஆயுதங்களில் ஒன்று அவரது விரல் துப்பாக்கி. அதைப்போலவே இந்த படத்திலும் நம்முடைய ரோபோ சிட்டி தானே சுயமாக சிந்திக்கும் இரண்டாம் பகுதியில் தன்னுடைய விரலில் ஒரு விரல் துப்பாக்கியை பொருத்திக்கொள்கிறது.

மூன்றாவது ஒற்றுமை:
Stup23-022 Stup23-023 Stup23-094

வழக்கமாக இரும்புக்கை மாயாவிக்கு எப்போது சங்கடம் வருமென்றால் அவரது உடலில் மின்சாரம் குறைந்து அவரது மாயத்தன்மை குறைந்து அவரது உடல் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து விடும். அப்போது அவர் உடனடியாக வேறொரு மின்சார சக்தியை தேடுவார். அப்படி மின்சாரமே இல்லை என்றால் கார் எள்ளது வேறு ஏதாவது எஞ்சின் பேட்டரியில் இருந்து அந்த பவரை உபயோகித்து மாயமாக மறைவார்.

அதைப்போலவே இந்த படத்திலும் ரஜினி உருவாகிய ரோபோவாகிய சிட்டியை அழிக்க ரஜினி திட்டம் தீட்டுவார். அதன் முதல் கட்டமே நகரின் அனைத்து மின்சார இணைப்பையும் துண்டித்து, ஜெனரேடரை செயலிழக்க வைத்து அதன் பின்னர் சிட்டி உருவாகிய அனைத்து ரோபோக்களும் பேட்டரி இல்லாமல் முடக்கப்படும்போது வெற்றி பெறலாம் என்பதே. அதன்படி ரஜினி எல்லாவற்றையும் செய்துவிடுவார். ஆனால் ரஜினி உருவாக்கிய அந்த ரோபோ (சிட்டி) உடனடியாக ஒரு காரை நிறுத்தி அந்த காரின் பேட்டரியில் இருந்து தனக்கு தேவையான சக்தியை பெற்று ரீ சார்ஜ் செய்துக்கொள்ளுகிறார்.

இப்படியாக தமிழ் காமிக்ஸ் உலகின் இணையற்ற ஹீரோவாக திகழும் இரும்புக்கை மாயாவியுடன் பல ஒற்றுமைகளை எந்திரன் படம் கொண்டுள்ளது. அந்த படத்தை கண்டு ரசியுங்கள்.

எந்திரன் விமர்சனம்:

endhiran-get-ready Superstar-Rajini-in-Endhiran-the-robot-movie-1

படம் உண்மையிலேயே அட்டகாசம். காமிக்ஸ் பிரியர்கள் ரசித்து பார்க்கலாம். படத்தின் முதல் பாகம் நேரம் போவதே தெரியாமல் போகிறது. ஆனால் இரண்டாம் பகுதியில் சில காட்சிகளையும் ஒரு பாடலையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கத்திரி போடலாம். போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசி முப்பது நிமிடங்கள் சூப்பர்.

கதை:

Endhiran (1) Endhiran-Movie-Latest-Unseen-Photo-Gallery-Stills-01 images

endhiran-robot வசீகரன் (ரஜினி) ஒரு ரோபோடிக்ஸ் விஞ்ஞானி. அவரது ஆராய்ச்சியின் குறிக்கோளே தனியே இயங்கும் ஆற்றல் கொண்ட ஒரு ரோபோவை தயாரிப்பதுதான். அதனால் அவர் மருத்துவம் படிக்கும் சனாவை கூட (ஐஸ்வர்யா ராய் பச்சன்) கண்டுகொள்ளாமல் தன்னுடைய உதவாக்கரை (நம்பிக்கை துரோகம் செய்யும்) உதவியாளர்களுடன் (சந்தானம் மற்றும் கருணாஸ்) ஆராய்ச்சியில் மூழ்கி இருக்கிறார். அப்படி அவர் தயாரிக்கும் ஒரு ரோபோவை அவரது குருவாகிய டேனி (அந்நியன் தொலைகாட்சி தொடரில் வந்தவர்) இந்த ரோபோவிற்கு உணர்சிகள் இல்லை என்று கூறி நிராகரித்து விடுகிறார். அதனால் அந்த ரோபோவிற்கு உணர்சிகளை உருவாக்குகிறார் ரஜினி.

அந்த ரோபோ சனாவை காதலிக்க துவங்குகிறது. ரஜினி அதனை அழித்து விடுவதாக மிரட்டுகிறார். அதனால் அந்த ரோபோ ராணுவ அதிகாரிகளிடம் வைரமுத்துவின் கவிதையை சொல்லி ரஜினியை அவமானப்படுத்தி விடுகிறது. கடுப்பாகிவிடும் ரஜினி அந்த ரோபோவை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து குப்பி தொட்டியில் போட்டு விடுகிறார். அதனை டேனி மறுபடியும் ஒன்றுசேர்த்து அதற்க்கு அழிக்கும் சிந்தனையை ஒரு ரெட் சிப்பில் வைத்து விடுகிறார். அந்த ரோபோவும் கல்யாண மண்டபத்தில் நுழைந்த சனாவை தூக்கிகொண்டு சென்று விடுகிறது. அதற்க்கு பிறகு ரஜினி அந்த ரோபோவிடம் இருந்து எப்படி தன்னுடைய காதலியையும், நாட்டையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

ஒரே ஒரு குறை: ரஜினி என்ற மாய பிம்பத்தை துரத்தி, துரத்தியே ஒரு சூப்பர் ஸ்டாரை மட்டுமே காணத்துடிக்கும் பலகோடி ரசிகர்கள், இந்த படத்தை பார்த்தவுடன் தமிழகம் எவ்வளவு பெரிய வில்லன் நடிகரை (அல்லது நடிகரை) இழந்துள்ளது என்பதை அந்த வில்லன் ரோபோ ரஜினி செய்யும் அசத்தலான, அதே சமயம் அலட்டல் இல்லாத நடிப்பின் மூலம் உணருவார்கள். படத்தின் ஒரே நட்சத்திரம் அந்த ரோபோ ரஜினிதான்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Wednesday, June 9, 2010

கண்ணி தீவு பார்ட் த்ரீ

Alternative Title = கண்ணி தீவு பார்ட் த்ரீ அல்லது மருத்துவரின் பிறந்த நாளும் - காத்திருந்த கதையும்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

இன்று உயர்திரு மருத்துவர் ஐயா அவர்களின் பிறந்த நாள் ஆகும். இன்று (அட்லீஸ்ட் இன்றாவது) தமிழ் காமிக்ஸ் உலகின் கிங் விஸ்வா அவர்கள் ஒரு பதிவை இடுவார் என்று எண்ணி காலையில் இருந்து காத்திருந்து கடுப்பாகி விட்டதால் வேறு வழி இல்லாமல் இந்த பதிவு.

உண்மையில் நான் இட எண்ணி இருந்த பதிவானது மாடச்ச்தி கதையின் இரண்டாவது மற்றும் இறுதி பாகமாகும்.அந்த அதியற்புத கதையின் ஆரம்ப பகுதியை படிக்க கீழ்க்காணும் அட்டைப்படத்தினை அமுக்கவும், ஐ மீன், கிளிக் செய்யவும்.

படித்து முடித்தாயிற்றா? ஒக்கே, அடுத்து நடக்கப் போவது என்ன?

மாடச்தியின் நிலை என்ன ஆயிற்று?

மர்ம உளவாளி உண்மையில் யார்?

மாடஸ்தி உடைகளை கழட்டும் "அந்த" சீன எப்போது வரும்?

மொரோக்கோ இளவரசி என்ன ஆனார்?

என்று பல கேள்விகளுக்கு பதில் தெரிய பல கோடி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கையில் இன்று அந்த இரண்டாம் பகுதியை வெளியிட தயாராக இருக்கையில் நண்பர் இவ்வாறாக சதி செய்து விட்டார். வேறுவழி இல்லாமல் நான் இந்த ஸ்மால் பதிவை இடுகிறேன். நண்பர்கள் மன்னித்தருள்க.

Iniya Udhayam 1st Sept 1995 

சரி, இந்த கதைக்கும் இந்த பதிவிற்கும் இன்னும் என்ன சம்பந்தம் என்று புரியாத புதிய வாசகர்களுக்கு மட்டும் இந்த பத்தி: மற்றவர்கள் ஸ்கிப் செய்து விட்டு அடுத்த பத்திக்கு செல்லலாம்.

பல வருடங்களாக பதிவிடாமல், விரைவில், விரைவில் என்றே சொல்லி காலம் தள்ளி வரும் நம்ம கிங் விஸ்வா கூட அந்த காட்டில்தான் இருக்கிறாராம். அடுத்த பதிவிட காத்திருக்கிறாராம். என்ன கொடுமை சார் இது?

ஒக்கே, இந்த நல்ல நாளில் நம்ம பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை சொல்லி விடை பெறுவோம்.

Happy Birth Day, Doctor 7.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Friday, May 28, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் சிங்கம்

 பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நம்முடைய சென்ற சினிமா சம்பந்தப்பட்ட பதிவானது (தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா) மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது நினைவிருக்கும். அதனால் இனிமேல் அதனைப்போலவே சில பல பதிவுகளை இடலாம் என்று பலரும் கூறி இருந்தனர். குறிப்பாக கோவையிலிருந்து மருத்துவர் திரு கந்தசுவாமி அவர்கள் கொடுத்த வரவேற்பே இந்த பதிவின் மூலக்காரணம். அவருக்கு எங்கள் நன்றிகள்.

இன்று நடிகை ஜோதிகாவின் புருஷனாகிய சூர்யா நடித்த "சிங்கம்" என்ற படம் ரிலீஸ் ஆகி உள்ளது.  எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை சிங்கத்தை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு. நான் முதலில் படித்த சிங்கம் பெயருள்ள காமிக்ஸ் கதை "சிங்கத்தின் குகையில்" ஆகும். முத்து காமிக்ஸ் மறுபடியும் ஆசிரியர் விஜயன் அவர்களின் கைவண்ணத்தில் புத்துயிர் பெற்று வந்த நேரத்தில் வந்த ஒரு அற்புதமான கதை. இதில் வரும் ஒரு வில்லர் (வில்லனுக்கு கொஞ்சம் மரியாதை தான்) மிகவும் நுணுக்கமான ஒரு மனிதர். இந்த கதைக்கே ஆணிவேர் அவர்தான். ஆங்கிலத்தில் ஸ்பை-13 என்ற பெயரில் வந்த இந்த கதை தொடர் மிகவும் பிரபலம் பெற்றது.

முத்து காமிக்ஸ் இதழ் எண் 178 ஏஜென்ட் சைமன் (Spy – 13) தோன்றும் சிங்கத்தின் குகையில்

MuthuComics178SingathinGuhaiyil1

அடுத்தபடியாக நான் படித்த சிங்க வரிசை கதை கூட முத்து காமிக்ஸில் வந்த ஒன்றுதான். ஆம், விங் கமாண்டர் ஜார்ஜ் தோன்றும் சிங்கத்திற்கொரு சவால் என்ற கதைதான் அது. இது ஒரு போட்டியான கதை ஆகும். வழமையான ஜார்ஜ் கதை போல இல்லாமல் சற்று வேகமாக இருந்த கதை இது. இந்த விங் கமாண்டர் ஜார்ஜ் கதைகளைத்தான் ராணி காமிக்ஸில் ஜானி என்ற பெயரில் வெளியிட்டார்கள்.

முத்து காமிக்ஸ் இதழ் எண் 217 சிங்கத்திற்கொரு சவால் விங் கமாண்டர் ஜார்ஜ் சாகசம் Johnny Hazard

Singathirkoru Saval

அடுத்து நான் படித்த சிங்க தலைப்பு இருந்த கதை திகில் லைப்ரரி இதழில் வந்த இரண்டாம் புத்தகம் ஆகும். ஆம், ஷெர்லக் ஹோல்ம்ஸ் துப்பறிந்த "சிங்கத்தின் பிடரி" என்ற கதைதான் அது. இந்த கதை இப்போதும் திரு ஐய்யம்பாளயத்தாரால் மிகவும் ரசிக்கப்படுகிறது என்றால் அதன் சிறப்பான கதையோட்டமே காரணம் ஆகும்.

திகில் லைப்ரரி முதல் இதழ் விளம்பரம் “பிடறி” சிங்கத்தின் பிடரி (றி இல்லை றி தான்) முதல் பக்கம்
Thigil Library Issue No 1 Dated 1st March 1993 Next Issue Ad Thigil Library Issue No 2 Dated 1st Septl 1993 Sherlock Holmes 1st Page

Thigil Library Issue No 2 Dated 1st Sept 1993 Front Wrapper

அடுத்து நான் படித்த சிங்க கதை ராணி காமிக்ஸில் வந்த சிங்க சிறுவன் ஆகும். சூப்பர் கதை, வேறொன்றுமில்லை மேற்கொண்டு சொல்ல.

ராணிகாமிக்ஸ் இதழ்343 அடுத்த வெளியிடு விளம்பரம் ராணி காமிக்ஸ் இதழ் 344 சிங்கசிறுவன் முதல் பக்கம்
Rani Comics No 343 Palaivanak Kollai Next Issue Ad Rani Comics No 344 Singa Siruvan Cover

Rani Comics No 344 Singa Siruvan

அது சரி, இப்போது வந்துள்ள சிங்கம் படம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்கிறீர்களா? சரிதான். இந்த சன் பிக்சர்ஸ் படம் என்றாலே எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும். இந்த சிங்கம் படம் பார்ப்பதைவிட மர்மவீரன் மாவீரன் சிங்கன் தோன்றிய கடல் கொள்ளைக்காரி கதையையே படித்து விடலாம்.

சிம்ரன் மற்றும் விஜய் தோன்றிய பிரியமானவளே படத்தின் போட்டோ ஸ்டில்லை மாடலாக கொண்டு வரைந்த அட்டைப்படம் 

Rani Comics No 490 Kadal Kollaikkari Singam

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Monday, May 24, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் - கார்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நம்முடைய சென்ற பதிவானது (தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா) மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வெற்றிப்பட இயக்குனரும், வெற்றிப்பட நடிகர், இளைய தளபதி, மருதுதுவர் விஜய் அவர்களின் தந்தையுமான வருங்கால தமிழக கவர்னர் திரு எஸ். ஏ.சந்திரசேகரா அவர்களிடம் இருந்து தனிப்பட்ட பாராட்டி வந்தது. அவருக்கு நன்றிகள் பல. வெகு விரைவில் காவல்காரன் வேறு வரவிருப்பதால், "வேட்டை - ஆரம்பமாயிடுச்சு டோய்" என்று நம்முடைய கட்டம் போட்ட கர்சிப்பை இடது தொடையில் கட்டிக்கொண்டு களமிறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இங்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

சமீபத்தில், நான் ஒரு விபத்தை சந்தித்தது (தமிழ் காமிக்ஸில் விபத்துகள்) பற்றி அனைவரும் அறிந்ததே. அந்த விபத்தில் என்னுடைய வாகனம் பழுதடைந்தது மக்களுக்கு தெரியும். ஆகையால், சமீபத்தில் ஒரு சீருந்து ஒன்று வாங்கினேன். அதனை பற்றிய விவரங்கள் பதிவின் முடிவில். இந்த தருணத்தில் தமிழ் காமிக்ஸ் உலகில் கார்கள் பற்றிய சிறப்பு பதிவொன்றை இட்டால் என்ன என்று தோன்றியது. அதனால் களமிறங்கி விட்டோம்.

காமிக்ஸ் உலகில் கார் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது மினி லயன் காமிக்ஸில் வந்த கொள்ளைக்கார கார் கதைதான். சிறப்பான நடையும், துள்ளலான கதையோட்டமும், தெளிவான தமிழாக்கமும் இதன் வெற்றிக்கு காரணங்கள். இந்த கதையை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள கிங் விஸ்வாவின் இந்த பதிவை படியுங்கள்.

மினி லயன் காமிக்ஸ் - கொள்ளைக்கார கார் - ஒரு சூப்பர் டூப்பர் கதை - இங்கே சென்று படியுங்கள்
Mini Lion Comics Issue No 25 July 1990 Kollaikara Car Spirou Starter

அடுத்தபடியாக நான் சொள்ளவிருப்பது குங்க்பூ மன்னன் புரூஸ்லீ தோன்றிய கார் பந்தையம் ஆகும். இந்த கதைதான் நான் படித்த முதல் புரூஸ்லீ கதை. அந்த தருணங்களில் புரூஸ்லீ ஒரு கல்ட் ஹீரோவாக அவதாரம் எடுத்திருந்தார். ஆகையால் மிகவும் ஆர்வமுடன் இதனை படித்தேன். இது உண்மையில் திரைப்படமாக வந்த பிக் பாஸ் படத்தின் ஒரு அங்கமாகும். படிக்க தவறாதீர்கள்.

 

ராணி காமிக்ஸ் - அடுத்த இதழ் -கார் பந்தயம்

குங்க்பூ மன்னன் புரூஸ்லீ தோன்றும் கார் பந்தயம்

Rani Comics Car Pandhayam Next Issue Rani Comics Car Pandhayam

எகிப்திய மம்மி என்று ஒரு கதை ராணி காமிக்ஸில் வந்தது. யாருக்காவது நினைவிருக்கிறதா? அந்த கதை ஹீரோ பெயர் தியோ. அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர் ஒரு வித்தியாசமான ஹீரோ என்று பெயரெடுத்தவர். அவரின் கதைகள் இரண்டே இரண்டு தான் வந்துள்ளன. அவற்றில் இது இரண்டாவது கதை. காலப்பயணம் செய்யும் திறனுள்ள ஒரு வாகனம் அவரது சிறப்பு அம்சமாகும்.

ராணி காமிக்ஸ் - துப்பறியும் வீரர் தியோ தோன்றும் சூப்பர் கார்

Rani Comics Super Car Next Issue
Rani Comics Super Car

சிறப்பு வாய்ந்த ஓவியர் ரோமேரோவின் படைப்பாகிய ஆக்ஸா தமிழில் வந்துள்ளது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை தருகிறது. பல வகையில் சென்சார் செய்யப்படவேண்டிய சித்திரங்களை கொண்டது இந்த தொடர். இதனையும் தமிழில் கொண்டு வந்தது ஆசிரியர் ராமஜெயம் அவர்களின் சிறப்பான திறமையை காட்டுகிறது.

 

பெண் டார்ஜான் ரீனா தோன்றும் கார் வேட்டை - குத்துன்னா குத்து - கும்மாங் குத்து

Rani Comics Car Vettai

கடைசியாக, இதோ இதுதான் என்னுடைய பெற்றோர்கள் சமீபத்தில் வாங்கிய காரின் புகைப்படம் (பின்னே என்னங்க, நான் கார் வாங்கினேன் என்று சொன்னால், உடனே எப்போ டிரீட் என்று கேட்கிறார்கள் - அதான் - என்னுடைய பெற்றோரின் வாகனம் என்று கூறிவிட்டேன்).

 

Car He He he

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இடகூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Monday, May 3, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நேற்றைய "தல" பதிவானது தமிழ் காமிக்ஸ் உலகில் பல அதிரடி மாற்றங்களை கொணர்ந்துள்ளது.

அதாகப்பட்டது, பல (உண்மையிலேயே) இளைய தளபதி டாக்டர் விஜய் ரசிகர்கள் நமக்கு மின்னஞ்சல் அனுப்பி நீங்கள் "தல" ரசிகரா? அதனால் தான் சுறா ரிலீஸ் ஆகும் தருணத்தில் "தல" பற்றிய பதிவினை இட்டு (இன்னமும் இருக்கும்) இளைய தளபதி டாக்டர் விஜய் ரசிகர்களை மனம் நோகச் செய்கிறீர்கள் - என்று வினவினார்கள். இந்த அரசியலில் கலக்க விரும்பாத ஒரு காரணத்தினால், இந்த பதிவானது இடப்பட்டுள்ளது. எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை "சுறா"வை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.

என்னிடம் இருக்கும் புத்தகங்களிலேயே இதுதான் முதல் சுறா படக்கதை. அதனால் இந்த அட்டைப்படத்தினை முதலில் அளித்துள்ளேன். இந்த புத்தகம் ஒரு கிடைத்தற்கரிய புத்தகம். இந்த புத்தகத்தினை கனவுகளின் காதலர் (கவனித்தீர்களா மரியாதையை - ர்) போன்ற ரசிகர்கள் முதலில் கடையில் வாங்கி படித்திருக்கவும் வாய்ப்புண்டு. ஹாஜா, காதலர், முத்து விசிறி போன்ற நண்பர்கள் அந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டால் சுகம்.

இந்த புத்தகத்தினை நான் முதலில் பார்த்தபோது லாரன்ஸ் டேவிட் ஜோடி சாகாசம் போலிருக்கிறது என்றெண்ணி விட்டேன். அட்டையில் இருக்கும் லோதரை பார்க்கையில் டேவிட் போலவே இருந்தது (கிறது?).

முத்து காமிக்ஸ் - மந்திரவாதி மாண்டிரெக் கதை - குறும்புக்கார சுறாமீன் – Issue No 77 – 15th June 1978

Kurumbukaara Surameen

என்னிடம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் மற்றுமொரு புத்தகம் இது. இதுவும் கிடைத்தற்கரிய ஒன்றே ஆகும். இதனை எல்லாம் ரீபிரின்ட் செய்ய சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால் கடந்த முத்து காமிக்ஸ் (மாண்டிரெக் சாகசம்) விற்பனை நிலையை சற்றேன்ணினால் வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என்றே தோன்றுகிறது.

முத்து காமிக்ஸ் - மந்திரவாதி மாண்டிரெக் சாகசம் - விண்ணில் நீந்தும் சுறா – Issue 81 – 15th Oct 1978

Vinnil Neendhum Sura

நான் படித்த முதல் ஒரு ருபாய் முத்து காமிக்ஸ் இதுதான். இந்த கதையில் ஜார்ஜ் உடன் வரும் ஒரு பெண் பாத்திரம் என் மனதை கவர்ந்த ஒரு பாத்திரம் ஆகும். இந்த கதை இதுவரை ராணி காமிக்ஸில் வரவில்லை என்பது கூடுதல் தகவல்.

முத்து காமிக்ஸ் - ஜார்ஜ் சாகசம் - ராணி காமிக்ஸ் ஜானி - சுறாமீன் வேட்டை – Issue 128 – 01st Sept 1981

Surameen Vettai

நான் வாங்கிய முதல் ராணி காமிக்ஸ் இதுவே. வேவு வீரர் ஜேம்ஸ் பான்ட் என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஹீரோ. அதுவும் அந்த முரட்டு கத்யாவை கவர அவர் படும்பாடு இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாளாது. பல கிளுகிளுப்பான காட்சிகள் நிறைந்த கதை என்பதை சொல்லவும் வேண்டுமோ?

ராணி காமிக்ஸ் - வேவு வீரர் 007 ஜேம்ஸ் பான்ட் சாகசம் - சுறா வேட்டை – Issue No 7

Rani Comics Sura Vettai

உலகிலேயே ராணி காமிக்ஸில் தான் ஒரே பெயரில் பல கதைகள் அட்டைப்படத்திலேயே வந்துள்ளது என்றெண்ணுகிறேன். அதற்க்கு உதாரணம் இதோ:

ராணி காமிக்ஸ் - முகமூடி வீரர் மாயாவி -அடுத்த வெளியீடு விளம்பரம் 

ராணி காமிக்ஸ் - முகமூடி வீரர் மாயாவி- சுறா வேட்டை 

Rani Comics 331 Sura Vettai Next Issue Ad Rani Comics 332 Sura Vettai 1st Page

ஆம், ஆரம்ப காலத்தில் ஜேம்ஸ்பான்ட் எப்படி ராணி காமிக்ஸை காப்பாற்றினாரோ, அதைப்போலவே பிற்காலத்தில் மாயாவியும் ராணியை காப்பாற்றினார். இது மாயாவியின் சுறா வேட்டை.

ராணி காமிக்ஸ்-முகமூடி வீரர் மாயாவி-விறுவிறுக்க வைக்கும் படக்கதை-சுறா வேட்டை-படிக்க தவறாதீர்கள்

Rani Comics 332 Phantom Sura Vettai Cover

dr 7

இந்த இடத்தில் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களைப் பற்றி சொல்லியே தீரவேண்டும். தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த விஷயம் (நன்றாக கவனிக்கவும் - விடயம் இல்லை) என்னவென்றால் அவர் ஒரு மருத்துவர் விஜய் ரசிகர் என்பது. ஆனால் தெரியாத விஷயம் என்ன என்றால் அவர் கடந்த மருத்துவர் விஜய் படமாகிய வேட்டைக்காரனை தியேட்டரில் பிளாக் டிக்கெட் கொடுத்து பார்த்தார் என்பதே. அந்த தருணத்தில் அவர் வெளியிட்ட இரண்டு பதிவுகளும் வேட்டைக்கரனை பற்றியதே. முதல் பதிவு வேட்டைக்காரன் திரை விமர்சனம். (படிக்க இங்கே அமுக்கவும் - அமுக்கினால் தனியாக வரும்) இரண்டாவது பதிவு - வேட்டைக்காரியை பற்றியது. அது ஒரு கசமுசா பதிவாகும், அதனை படிக்க இங்கே கிளிக்கவும். இதோ தமிழ் காமிக்ஸில் வந்த வேட்டைக்காரன் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

ராணி காமிஸ் - முகமூடி வீரர் மாயாவி - வேட்டைக்காரன் 1

ராணி காமிஸ்-முகமூடி வீரர் மாயாவி  வேட்டைக்காரன் 2

Rani Comics Vettaikkaran 1 Rani Comics Vettaikkaran 2

சரி, ஏதோ சென்ற படத்தை தான் பிளாக் டிக்கெட்டில் பார்த்தார் என்றால் இந்த சுறா படத்தை சுமார் இருநூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து தனியாக (ஆமாங்க, தனி ஆளாக - ஒண்டியாக) இந்த படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு செய்கூலி சேதாரம் இல்லாமல் திரும்பி வந்துள்ளார் என்பதே இந்த பதிவில் நாம் கூற விரும்பும் முக்கிய கருத்து.

வாழ்க டாக்டர் செவன், வளர்க அவரது தைரியம். உண்மையிலேயே நாம் அவரைப்பாராட்டியே தீர வேண்டும். எத்துனை தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியத்தை தனியாக செய்திருப்பார். இதற்காகவே எஸ்.எ. சந்திரசேகரா அவர்கள் இவருக்கு தனியாக ஏதாவது ஒரு விருது வழங்க வேண்டும். அல்லது நாம் அனைவரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு மனு போட்டு நமது நாட்டின் உயரிய வீரச்செயலுக்கு வழங்கப்படும் பரம் வீர் சக்ரா போன்ற விருதகளையாவது வழங்க ஆவன செய்ய வேண்டும்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Related Posts with Thumbnails