Showing posts with label special. Show all posts
Showing posts with label special. Show all posts

Thursday, November 18, 2010

முத்து விசிறியும், இயக்குனர் பிரபு சாலமனும் மற்றும் ஆனந்த விகடனும் - ஒரு சிறப்பு முன்னோட்டம்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

வழக்கமாக தமிழ் காமிக்ஸ் உலகில் முன்னோட்டங்கள் என்றால் அது புத்தகம் குறித்தோ அல்லது வெளியீடு குறித்தோ இருக்கும். பலரும் வர இருக்கும் புத்தகங்களின் அட்டைகளை பற்றி பதிவிட்டு இருக்கிறார்கள். கிங் விஸ்வாவோ ஒரு படி மேலே போய் அடுத்து வர இருக்கும் புத்தகத்தின் ஹாட் லைனின் ஒரு பகுதியை பற்றி முன்னோட்டப்பதிவு இட்டு இருக்கிறார். ஆனால் இங்கு நாம் இடப்போகும் முன்னோட்டப்பதிவு சற்றே வித்தியாசமானது.

ஆம், காமிக்ஸ் நியூஸ் என்ற பெயரில் வழமையாக கிங் விஷ்வாவும், பயங்கரவாதி டாக்டர் செவனும் காமிக்ஸ் குறித்த செய்திகளை வெளியிடுவார்கள். அந்த வகையில் வரப்போகும் காமிக்ஸ் நியூஸ் குறித்த முன்னோட்ட பதிவு இது: ஆமாம், நாளை வர இருக்கும் ஆனந்த விகடன் இதழில் காமிக்ஸ் குறித்த ஒன்றல்ல, இரண்டு செய்திகள் வர இருக்கின்றன.

 தகவல் ஒன்று: முத்து விசிறியின் காமிக்ஸ் வலைத்தளம் - விகடன் வரவேற்பறையில் வழமையாக விகடன் வரவேற்பறை பகுதியில் ஒரு வலைத்தளம், ஒரு புத்தகம், ஒரு குறுந்தகடு என்று பல நல்ல விஷயங்களை மக்களுக்கு அறிமுகம் செய்வார்கள். அந்த வகையில் விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் நம்முடைய தமிழ் காமிக்ஸ் உலகின் இணையதள மாமன்னர், ஈடிணையற்ற பேரரசர் திரு முத்துவிசிறி அவர்களின் தளம் குறித்து அறிமுகம் உள்ளது. இதோ அந்த அறிமுகம்:

MF

கம்பியூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷனும் வந்த பிறகு காணாமல் போன பால்ய காலத்து சந்தோஷங்களில் ஒன்று காமிக்ஸ். இங்கு தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் ஸ்கான் செய்யப்பட்டு வலையேற்றப்பட்டு இருக்கின்றன. ஆங்கில காமிக்ஸ்களின் கதை சுருக்கமும் தரப்பட்டு இருக்கின்றது. காமிக்ஸ் புத்தகங்களின் சந்தை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை சுவாரஸ்யம். நினைவுகளில் புதைந்து போன ஸ்பைடர் (மேன்?!?), இரும்புக்கை மாயாவி இங்கு உலவிக்கொண்டு இருப்பது ஆச்சர்யம்.

என்ன, அவ்வளவு தூரம் சொல்லி இருந்தும் மக்களால் ஸ்பைடர் என்பது வேறு, ஸ்பைடர்மேன் என்பது வேறு என்பதை இன்னமும் தெரிந்துகொள்ளவில்லை. இருக்கட்டும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த முத்து விசிறி அவர்களின் வலைதளத்தை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்: முத்து விசிறியின் முத்தான வலை தளம்

தகவல் இரண்டு: விகடனின் மற்றுமொரு வித்தியாசமான பகுதி 16 பிளஸ். இந்த பகுதியில் பல சுய முன்னேற்ற கட்டுரைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நான் (சோ எண்டு சோ ) ஆனது எப்படி என்று ஒரு பிரபலம் தான் எப்படி பிரபலம் ஆனார் என்று கூறுவார். அப்படி இந்த வாரம் மைனா பட இயக்குனர் பிரபு சாலமன் தன்னுடைய வாழ்க்கையை பற்றி கூறுகையில் கீழ்க்காணும் வரிகள் வருகின்றன.

Prabhu-Solomon

நான் பிரபு சாலமன் ஆனது எப்படி: "சின்ன வயசு நினைவுகளில் முத்து காமிக்ஸ் மட்டுமே பளிச்சுன்னு ஞாபகத்தில் இருக்கு. இரும்புக்கை மாயாவியின் சாகசங்கள் என்னை வேறு உலகத்தில் உலாவ செய்யும்" என்று ஆரம்பிக்கும் அந்த கட்டுரை அவரின் பால்ய காலத்து நினைவுகளில் ஆரம்பித்து அவரது சமீபத்து படமாகிய மைனா வரை வந்து முடிகிறது.

இப்படியாக இந்த மாதிரி காமிக்ஸ் விஷயங்களை அடிப்படையாக கொண்டு இரண்டு செய்திகளை தாங்கியவாறு ஆனந்த விகடன் நாளை கடைகளில் விற்பனைக்கு வருகிறது. படிக்க தவறாதீர்கள்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Wednesday, June 9, 2010

கண்ணி தீவு பார்ட் த்ரீ

Alternative Title = கண்ணி தீவு பார்ட் த்ரீ அல்லது மருத்துவரின் பிறந்த நாளும் - காத்திருந்த கதையும்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

இன்று உயர்திரு மருத்துவர் ஐயா அவர்களின் பிறந்த நாள் ஆகும். இன்று (அட்லீஸ்ட் இன்றாவது) தமிழ் காமிக்ஸ் உலகின் கிங் விஸ்வா அவர்கள் ஒரு பதிவை இடுவார் என்று எண்ணி காலையில் இருந்து காத்திருந்து கடுப்பாகி விட்டதால் வேறு வழி இல்லாமல் இந்த பதிவு.

உண்மையில் நான் இட எண்ணி இருந்த பதிவானது மாடச்ச்தி கதையின் இரண்டாவது மற்றும் இறுதி பாகமாகும்.அந்த அதியற்புத கதையின் ஆரம்ப பகுதியை படிக்க கீழ்க்காணும் அட்டைப்படத்தினை அமுக்கவும், ஐ மீன், கிளிக் செய்யவும்.

படித்து முடித்தாயிற்றா? ஒக்கே, அடுத்து நடக்கப் போவது என்ன?

மாடச்தியின் நிலை என்ன ஆயிற்று?

மர்ம உளவாளி உண்மையில் யார்?

மாடஸ்தி உடைகளை கழட்டும் "அந்த" சீன எப்போது வரும்?

மொரோக்கோ இளவரசி என்ன ஆனார்?

என்று பல கேள்விகளுக்கு பதில் தெரிய பல கோடி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கையில் இன்று அந்த இரண்டாம் பகுதியை வெளியிட தயாராக இருக்கையில் நண்பர் இவ்வாறாக சதி செய்து விட்டார். வேறுவழி இல்லாமல் நான் இந்த ஸ்மால் பதிவை இடுகிறேன். நண்பர்கள் மன்னித்தருள்க.

Iniya Udhayam 1st Sept 1995 

சரி, இந்த கதைக்கும் இந்த பதிவிற்கும் இன்னும் என்ன சம்பந்தம் என்று புரியாத புதிய வாசகர்களுக்கு மட்டும் இந்த பத்தி: மற்றவர்கள் ஸ்கிப் செய்து விட்டு அடுத்த பத்திக்கு செல்லலாம்.

பல வருடங்களாக பதிவிடாமல், விரைவில், விரைவில் என்றே சொல்லி காலம் தள்ளி வரும் நம்ம கிங் விஸ்வா கூட அந்த காட்டில்தான் இருக்கிறாராம். அடுத்த பதிவிட காத்திருக்கிறாராம். என்ன கொடுமை சார் இது?

ஒக்கே, இந்த நல்ல நாளில் நம்ம பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை சொல்லி விடை பெறுவோம்.

Happy Birth Day, Doctor 7.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Friday, May 28, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் சிங்கம்

 பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நம்முடைய சென்ற சினிமா சம்பந்தப்பட்ட பதிவானது (தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா) மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது நினைவிருக்கும். அதனால் இனிமேல் அதனைப்போலவே சில பல பதிவுகளை இடலாம் என்று பலரும் கூறி இருந்தனர். குறிப்பாக கோவையிலிருந்து மருத்துவர் திரு கந்தசுவாமி அவர்கள் கொடுத்த வரவேற்பே இந்த பதிவின் மூலக்காரணம். அவருக்கு எங்கள் நன்றிகள்.

இன்று நடிகை ஜோதிகாவின் புருஷனாகிய சூர்யா நடித்த "சிங்கம்" என்ற படம் ரிலீஸ் ஆகி உள்ளது.  எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை சிங்கத்தை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு. நான் முதலில் படித்த சிங்கம் பெயருள்ள காமிக்ஸ் கதை "சிங்கத்தின் குகையில்" ஆகும். முத்து காமிக்ஸ் மறுபடியும் ஆசிரியர் விஜயன் அவர்களின் கைவண்ணத்தில் புத்துயிர் பெற்று வந்த நேரத்தில் வந்த ஒரு அற்புதமான கதை. இதில் வரும் ஒரு வில்லர் (வில்லனுக்கு கொஞ்சம் மரியாதை தான்) மிகவும் நுணுக்கமான ஒரு மனிதர். இந்த கதைக்கே ஆணிவேர் அவர்தான். ஆங்கிலத்தில் ஸ்பை-13 என்ற பெயரில் வந்த இந்த கதை தொடர் மிகவும் பிரபலம் பெற்றது.

முத்து காமிக்ஸ் இதழ் எண் 178 ஏஜென்ட் சைமன் (Spy – 13) தோன்றும் சிங்கத்தின் குகையில்

MuthuComics178SingathinGuhaiyil1

அடுத்தபடியாக நான் படித்த சிங்க வரிசை கதை கூட முத்து காமிக்ஸில் வந்த ஒன்றுதான். ஆம், விங் கமாண்டர் ஜார்ஜ் தோன்றும் சிங்கத்திற்கொரு சவால் என்ற கதைதான் அது. இது ஒரு போட்டியான கதை ஆகும். வழமையான ஜார்ஜ் கதை போல இல்லாமல் சற்று வேகமாக இருந்த கதை இது. இந்த விங் கமாண்டர் ஜார்ஜ் கதைகளைத்தான் ராணி காமிக்ஸில் ஜானி என்ற பெயரில் வெளியிட்டார்கள்.

முத்து காமிக்ஸ் இதழ் எண் 217 சிங்கத்திற்கொரு சவால் விங் கமாண்டர் ஜார்ஜ் சாகசம் Johnny Hazard

Singathirkoru Saval

அடுத்து நான் படித்த சிங்க தலைப்பு இருந்த கதை திகில் லைப்ரரி இதழில் வந்த இரண்டாம் புத்தகம் ஆகும். ஆம், ஷெர்லக் ஹோல்ம்ஸ் துப்பறிந்த "சிங்கத்தின் பிடரி" என்ற கதைதான் அது. இந்த கதை இப்போதும் திரு ஐய்யம்பாளயத்தாரால் மிகவும் ரசிக்கப்படுகிறது என்றால் அதன் சிறப்பான கதையோட்டமே காரணம் ஆகும்.

திகில் லைப்ரரி முதல் இதழ் விளம்பரம் “பிடறி” சிங்கத்தின் பிடரி (றி இல்லை றி தான்) முதல் பக்கம்
Thigil Library Issue No 1 Dated 1st March 1993 Next Issue Ad Thigil Library Issue No 2 Dated 1st Septl 1993 Sherlock Holmes 1st Page

Thigil Library Issue No 2 Dated 1st Sept 1993 Front Wrapper

அடுத்து நான் படித்த சிங்க கதை ராணி காமிக்ஸில் வந்த சிங்க சிறுவன் ஆகும். சூப்பர் கதை, வேறொன்றுமில்லை மேற்கொண்டு சொல்ல.

ராணிகாமிக்ஸ் இதழ்343 அடுத்த வெளியிடு விளம்பரம் ராணி காமிக்ஸ் இதழ் 344 சிங்கசிறுவன் முதல் பக்கம்
Rani Comics No 343 Palaivanak Kollai Next Issue Ad Rani Comics No 344 Singa Siruvan Cover

Rani Comics No 344 Singa Siruvan

அது சரி, இப்போது வந்துள்ள சிங்கம் படம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்கிறீர்களா? சரிதான். இந்த சன் பிக்சர்ஸ் படம் என்றாலே எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும். இந்த சிங்கம் படம் பார்ப்பதைவிட மர்மவீரன் மாவீரன் சிங்கன் தோன்றிய கடல் கொள்ளைக்காரி கதையையே படித்து விடலாம்.

சிம்ரன் மற்றும் விஜய் தோன்றிய பிரியமானவளே படத்தின் போட்டோ ஸ்டில்லை மாடலாக கொண்டு வரைந்த அட்டைப்படம் 

Rani Comics No 490 Kadal Kollaikkari Singam

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Monday, May 24, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் - கார்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நம்முடைய சென்ற பதிவானது (தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா) மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வெற்றிப்பட இயக்குனரும், வெற்றிப்பட நடிகர், இளைய தளபதி, மருதுதுவர் விஜய் அவர்களின் தந்தையுமான வருங்கால தமிழக கவர்னர் திரு எஸ். ஏ.சந்திரசேகரா அவர்களிடம் இருந்து தனிப்பட்ட பாராட்டி வந்தது. அவருக்கு நன்றிகள் பல. வெகு விரைவில் காவல்காரன் வேறு வரவிருப்பதால், "வேட்டை - ஆரம்பமாயிடுச்சு டோய்" என்று நம்முடைய கட்டம் போட்ட கர்சிப்பை இடது தொடையில் கட்டிக்கொண்டு களமிறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இங்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

சமீபத்தில், நான் ஒரு விபத்தை சந்தித்தது (தமிழ் காமிக்ஸில் விபத்துகள்) பற்றி அனைவரும் அறிந்ததே. அந்த விபத்தில் என்னுடைய வாகனம் பழுதடைந்தது மக்களுக்கு தெரியும். ஆகையால், சமீபத்தில் ஒரு சீருந்து ஒன்று வாங்கினேன். அதனை பற்றிய விவரங்கள் பதிவின் முடிவில். இந்த தருணத்தில் தமிழ் காமிக்ஸ் உலகில் கார்கள் பற்றிய சிறப்பு பதிவொன்றை இட்டால் என்ன என்று தோன்றியது. அதனால் களமிறங்கி விட்டோம்.

காமிக்ஸ் உலகில் கார் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது மினி லயன் காமிக்ஸில் வந்த கொள்ளைக்கார கார் கதைதான். சிறப்பான நடையும், துள்ளலான கதையோட்டமும், தெளிவான தமிழாக்கமும் இதன் வெற்றிக்கு காரணங்கள். இந்த கதையை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள கிங் விஸ்வாவின் இந்த பதிவை படியுங்கள்.

மினி லயன் காமிக்ஸ் - கொள்ளைக்கார கார் - ஒரு சூப்பர் டூப்பர் கதை - இங்கே சென்று படியுங்கள்
Mini Lion Comics Issue No 25 July 1990 Kollaikara Car Spirou Starter

அடுத்தபடியாக நான் சொள்ளவிருப்பது குங்க்பூ மன்னன் புரூஸ்லீ தோன்றிய கார் பந்தையம் ஆகும். இந்த கதைதான் நான் படித்த முதல் புரூஸ்லீ கதை. அந்த தருணங்களில் புரூஸ்லீ ஒரு கல்ட் ஹீரோவாக அவதாரம் எடுத்திருந்தார். ஆகையால் மிகவும் ஆர்வமுடன் இதனை படித்தேன். இது உண்மையில் திரைப்படமாக வந்த பிக் பாஸ் படத்தின் ஒரு அங்கமாகும். படிக்க தவறாதீர்கள்.

 

ராணி காமிக்ஸ் - அடுத்த இதழ் -கார் பந்தயம்

குங்க்பூ மன்னன் புரூஸ்லீ தோன்றும் கார் பந்தயம்

Rani Comics Car Pandhayam Next Issue Rani Comics Car Pandhayam

எகிப்திய மம்மி என்று ஒரு கதை ராணி காமிக்ஸில் வந்தது. யாருக்காவது நினைவிருக்கிறதா? அந்த கதை ஹீரோ பெயர் தியோ. அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர் ஒரு வித்தியாசமான ஹீரோ என்று பெயரெடுத்தவர். அவரின் கதைகள் இரண்டே இரண்டு தான் வந்துள்ளன. அவற்றில் இது இரண்டாவது கதை. காலப்பயணம் செய்யும் திறனுள்ள ஒரு வாகனம் அவரது சிறப்பு அம்சமாகும்.

ராணி காமிக்ஸ் - துப்பறியும் வீரர் தியோ தோன்றும் சூப்பர் கார்

Rani Comics Super Car Next Issue
Rani Comics Super Car

சிறப்பு வாய்ந்த ஓவியர் ரோமேரோவின் படைப்பாகிய ஆக்ஸா தமிழில் வந்துள்ளது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை தருகிறது. பல வகையில் சென்சார் செய்யப்படவேண்டிய சித்திரங்களை கொண்டது இந்த தொடர். இதனையும் தமிழில் கொண்டு வந்தது ஆசிரியர் ராமஜெயம் அவர்களின் சிறப்பான திறமையை காட்டுகிறது.

 

பெண் டார்ஜான் ரீனா தோன்றும் கார் வேட்டை - குத்துன்னா குத்து - கும்மாங் குத்து

Rani Comics Car Vettai

கடைசியாக, இதோ இதுதான் என்னுடைய பெற்றோர்கள் சமீபத்தில் வாங்கிய காரின் புகைப்படம் (பின்னே என்னங்க, நான் கார் வாங்கினேன் என்று சொன்னால், உடனே எப்போ டிரீட் என்று கேட்கிறார்கள் - அதான் - என்னுடைய பெற்றோரின் வாகனம் என்று கூறிவிட்டேன்).

 

Car He He he

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இடகூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Thursday, April 22, 2010

அய்யம்பாளயத்தாரின் அதிரடி அரசியல் பிரவேசம்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். தமிழ் காமிக்ஸ் உலகில் பல பதிவர்கள் இருந்தாலும்கூட தனியிடத்தினை பிடித்தவர் திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள். யாருக்கும் அஞ்சாமை, சீரிய சிந்தனை, நேர்மையான போக்கு, என்று பல குணாதிசயங்களை கொண்ட இவர் சுலபத்தில் அனைவரின் கருத்தினையும் கவர்ந்தவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தன்னுடைய காமிக்ஸ் பூக்கள் என்ற சிறுவர் இலக்கிய சிந்தனை வலைப்பூவிலேயே பல அனல் கக்கும் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசுபவர் அய்யம்பாளையம் சார் என்பது அவரின் வலைதளத்தினை தொடர்பவர்களுக்கு நன்றாக தெரியும். பல நாட்களாக தன்னுடைய கொள்கைகளை வகுத்துக்கொண்டிருந்த நண்பர் இப்போது அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கிறார். மிக, மிக விரைவில் கோட்டைக்கு போகப் போகும் அவரைப் பாராட்டி, இந்த நாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை கோட்டைகளை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.

முதன் முதலில் விஜயன் சாரின் தயாரிப்பில் வந்த கோட்டை கதை இதுதான். இந்த கதையை ராணி காமிக்ஸ் மறுபடியும் வெளியிட்டார்கள். அட்டைப்படம் அட்டகாசம்.

லயன் காமிக்ஸ் Issue No 011 - மாடஸ்டி ப்ளைசி - மரணக் கோட்டை – Death of a Jester

Lion011MaranaKottai2

தொன்னூறுகளில் வெளிவந்த பார்வதி சித்திரக்கதை புத்தகங்களில் வாண்டுமாமா அவர்களின் சிறந்த கதைகள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு.

பார்வதி சித்திரக் கதைகள் - வாண்டுமாமா - ஓநாய்க் கோட்டை - அங்கதன் கோட்டை அதிசயம்

PCK Onaaik Kottai
PCK Angadhan Kottai Athisayam

ராணி காமிக்ஸ் இதழ்களில் பல கோட்டை சம்பந்தமான கதைகள் வந்தன. அவற்றில் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.

ராணி காமிக்ஸ் - ஆசிரியர் ராமஜெயம் - கிட கார்சன் சாகசம் - மரக்கோட்டை - அற்புதமான கதை

Rani Comics Marak Kottai

ராணி காமிக்ஸ் - ஆசிரியர் ராமஜெயம் - ஜூலி சாகசம் - பீரங்கிக் கோட்டை - சென்சார் செய்யப்பட்ட படங்கள்

Rani Comics Beerangi Kottai

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கோட்டைக்குள் குத்து வெட்டு - கிட கார்சன்

Rani Comics Kottaikkul Kuthu Vettu

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - மர்மக் கோட்டை - பெண் சி.ஐ.டி மாடஸ்தி

Rani Comics Marma Kottai

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கடல் கோட்டை - நெஞ்சை அள்ளும் படக்கதை 

Rani Comics Kadal Kottai

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கடல் கோட்டை - முகமூடி வீரர் மாயாவி சாகசம்

Rani Comics Kadal Kottai Phantom

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கொலைகாரன் கோட்டை - கிட கார்சன் சாகசம்

Rani Comics Kolaikaran Kottai

வாண்டுமாமா அவர்களின் எழுத்தில் கோட்டை சார்ந்த மேலும் இரண்டு கதைகள் உங்களின் பார்வைக்கு. இவற்றில் இந்த கரடிக் கோட்டை புத்தகம் இன்னமும் விற்பனைக்கு உள்ளது. மேல் விவரங்களுக்கு இந்த பதிவினை படிக்கவும்.

வாண்டுமாமா - நெருப்பு கோட்டை - இல்லாத புத்தகம்

வாண்டுமாமா - கரடி கோட்டை

Palaniappa Brothers OO81 Neruppu Kottai Karadikkottai

தமிழ் காமிக்ஸ் உலகில் கேப்டன் பிரின்சை தெரியாதவர்கள் குறைவே. அவரின் ஒரே கதை இரண்டு பதிப்பகங்களின் மூலம் வந்துள்ளது. பார்த்து ரசியுங்கள்.

ஸ்டார் காமிக்ஸ் - பனிமலைக்கோட்டை

திகில் காமிக்ஸ் - பனி மண்டல கோட்டை

star comics pani mandala kottai Thigil Comics Pani mandala kottai

வாசகர்களுக்கு ஒரு போட்டி: அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கும் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாருக்கு பிற்காலத்தில் அரசியல் விடிவெள்ளி, வாழும் கலைஞர், ஓடும் வள்ளுவர் என்றெல்லாம் பட்டப்பெயர்கள் வழங்கப்படும். ஆனால், இப்போதைய நிலையில் (பேரரசர் என்பதை தவிர) வேறு பட்டப்பெயர்கள் இல்லாமல் இருக்கிறார் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சார். ஒரு அரசியல்வாதிக்கு அழகே பட்டப்பெயர் தான். ஆகையால் நமது அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாருக்கு ஒரு சரியான பட்டப்பெயரை தேர்ந்தெடுத்து வழங்குங்கள்.  பொருத்தமான பெயரை வழங்குபவர்களுக்கு பரிசு பதவி வழங்கப்படும்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Wednesday, April 21, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் ராணிகள்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.இன்று ஏப்ரல் இருபத்தி ஒன்றாம் தேதி. இன்றுதான் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள்.இந்த நாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை ராணிகளை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.

என்னடா, சமீபத்தில் ஒரே பிறந்தநாள் பதிவுகளா என்று என்னும் நண்பர்களே, சற்று பொறுங்கள். இன்று நம்முடைய பெருமதிப்பிற்குரிய மின்சார துறை அமைச்சர் திரு ஆற்காட்டார் அவர்களின் பிறந்த நாளும்கூட. சரி, அவருக்கு பொருத்தமாக சமீபத்தில் நம்முடைய லயன் காமிக்ஸ் கவ்பாய் ஸ்பெஷலில் வந்த இரும்புக் கை மாயாவி கதையை வெளியிடலாம் என்றுதான் நினைத்தேன் (அந்த கதையின் பெயரை சொன்னால் தீவிர தி மு க ஆதரவாளர்கள் என்னை விட மாட்டார்கள்). ஆனால், சென்ற பதிவே பல அரசியல் விளையாட்டுக்களை நடத்தி விட்டதால் வேறு வழி இல்லாமல் அந்த அரசியல் நொடி வீசும் பதிவினை இடாமல் இந்த சாதா பதிவு. என்சாய் மக்களே.

லயன் காமிக்ஸ் - சாகச வீரர் சாம்சன் - மந்திர ராணி - மறக்க முடியாத கதை

Lion Mandhira Rani

இந்த மந்திர ராணி கதை தமிழில் ஏற்கனவே வேறொரு இதழில் வந்துள்ளது. அது எந்த இதழ் என்று கூறுபவர்களுக்கு கனவுகளின் காதலரின் ஒன்றுவிட்ட சகோதரி மேகான் பாக்ஸின் மேலான் முத்தங்கள் கிடைக்கும். இது ஒரு அற்புதமான கதை. இந்த கதையில் ஒரு புதிர் சொல்லும் கிழவன் ஒருவர் வருவார். அந்த கட்டம் என்னால் இன்னமும் மறக்கவே இயலவில்லை. நன்றி விஜயன் சார்.

அடுத்தபடியாக, மிநிலயனில் வந்த சுஸ்கி & விஸ்கி சாகசமாகிய ராஜா, ராணி & ஜாக்கி. இந்த கதையில் ஒரு இடத்தில் புரூப் ரீடர் ஒரு தவறை கவனிக்க மறந்து இருப்பார். அது என்ன என்று யாராலாவது சொல்ல இயலுமா? இதனை சொன்னால் என்றும் தர்ம பத்தினியாக விளங்கும் புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப்படம் ஒன்று அன்பளிப்பாக கிடைக்கும்.

மினி லயன் காமிக்ஸ் - சுஸ்கி & விஸ்கி சாகசம் - ராஜா, ராணி & ஜாக்கி - ஒன்ஸ்மோர் விஜயன் சார்

Mini Lion#019 - Raja Rani Jackie

அடுத்தபடியாக நாம் காணவிருப்பது ராணி காமிக்ஸில் வந்த ராணி கதை பெயரை கொண்ட கதைகள். ஏக்சுவளி இரண்டு கதைகள் வந்துள்ளன. அவற்றின் விவரங்கள் இதோ:

ராணி காமிக்ஸ் Issue No 302- முகமூடி வீரர் மாயாவி - வேதாளர் - கொலைகார ராணி

Rani Kolaikara Rani
Rani Kolaikara Rani 1st page

இந்த கதை ஒரு சிறந்த கதையாக இருந்தாலும்கூட, மொக்கையான மொழிபெயர்ப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டு ரசிக்கவே இயலாத அளவுக்கு இருக்கும். உதாரணமாக பீனிக்ஸ் நாட்டு மன்னர் தன்னுடைய மகளை மாயாவிக்கு அறிமுகப்படுத்தும்போது "இவள்தான் டெய்சி - என்னுடைய மகள் - பேரழகி" என்று கூறுவார். அந்த கட்டத்தை படித்து பாருங்கள். அடுத்து ஒரு கட்டத்தில், மாயாவியை பார்த்து "ஆபத்தாண்டவா" என்று கதறுவார். என்ன கொடுமை சார் இது?

அடுத்து நாம் பார்க்கவிருப்பது ராணி காமிக்ஸில் கடைசி கால கட்டத்தில் வந்த ஒரு கதை. இந்த கதைக்கு "மொக்கை ராணி" என்று கூட பெயரிட்டு இருக்கலாம். அந்த அளவுக்கு மொக்கை போட்டு இருப்பார் இந்த இதழின் ஆசிரியர். முடியலடா சாமி, என்று மாயாவியே வாய் விட்டு கதறுவார். இந்த கதைக்கும் இந்திரஜால் காமிக்ஸ் கூலாகூ கொடுசூலி கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

ராணி காமிக்ஸ் Issue No 494 - வேதாளர் - முகமூடி வீரர் மாயாவி அதிரடி - அழகு ராணி

Rani Azhagu Rani
Rani Azhagu Rani 1st page

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Tuesday, April 20, 2010

ஹிட்லர் - ஒரு சகாப்தம்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.இன்று ஏப்ரல் இருபதாம் தேதி. இன்றுதான் ஹிட்லரின் பிறந்த நாள். (நீங்கள் தமிழ் விக்கிபீடியா படிப்பவரானால் இட்லர் என்றுதான் படிக்கவேண்டும், வேறுவழி இல்லை). இவரை பொறுத்தவரையில் ஒன்று இவரை ஹீரோவாக கொண்டாடுவார்கள் (எங்களைப் போன்றவர்கள்), அல்லது வில்லனாக உருவகப்படுதுவார்கள் (மற்ற சிலரைப் போல). வரலாறு என்பது எழுதப்படுவரின் எண்ணவோட்டத்தில் தான் இருக்கிறது என்பதை பொதுவானவர்கள் மறந்துவிடக்கூடாது. தற்போதைய இந்திய பள்ளிக்குழந்தைகள் பாட புத்தகங்களில் படிக்கும் விஷயங்களை பற்றி நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா? தயவு செய்து அடுத்த முறை ஏதாவது ஒரு வரலாற்று பாடப்புத்தகதினை பார்த்தால் சும்மா புரட்டி பார்க்காமல் தயவு செய்து படித்து பார்க்க முயலவும். பல விடயங்கள் புலப்படும். 

சரி, சரி சீரியசான விஷயங்களை விட்டு விட்டு நம்ம மேட்டருக்கு வருவோம். இந்த நன்னாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை ஹிட்லரையும், நாஜிக்களையும் மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.பெரும்பாலான கதைகள் இங்கிலாந்தில் இருந்தே வந்தவை என்பதால் அதில் அனைத்திலும் ஹிட்லர் ஒரு வில்லனாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார் என்பது வேறு விடயம். அதனைப்போலவே இங்கிலாந்து ராணுவ வீரர்கள் அனைவரும் யோக்கியமான ஹீரோக்கள் போல இருப்பார்கள். வேறு வழி இல்லை. சகித்துக் கொண்டே ஆகவேண்டும்.

ஹிட்லரை நேரிடையாக சம்பந்தப்படுத்தி இரண்டே இரண்டு காமிக்ஸ் கதைகள் தான் வந்துள்ளன (தவறாக இருந்தால் திருத்தவும் - இந்த பதிவு அவசரமாக போடப்படும் ஒன்று - தகவல் சரிபார்க்க நேரமில்லை). அதில் ஒன்றில் தலைப்பே மீண்டும் ஹிட்லர். கதையை நான் பலமுறை படித்து இருந்தாலும் இதன் அட்டைப்படதினை நான் இன்றுதான் பார்த்தேன். நண்பர் முத்து விசிறி அவர்கள் தான் அளித்தார். நண்பர்கள் சிலரிடம் கேட்டும் பயனில்லை. முத்து விசிறி வாழ்க.

லயன் காமிக்ஸ் - இரட்டை வேட்டையர் சாகசம் - மீண்டும் ஹிட்லர் - சூப்பர் ஹிட் கதை - பார்ப்பதற்கரிய அட்டைப்படம் 

032 Meendum Hitler

இரண்டாம் உலகப்போர் முடிந்து சுமார் இருவது வருடங்கள் கழித்து ஹிட்லரின் மகன் தனியொரு ராணுவத்தினை சேர்த்து மறுபடியும் இங்கிலாந்தினை தக்க முயல்வதே கதையின் சாராம்சம். அவர்களின் அட்டகாசத்தையும், அதனை உங்களின் அபிமான ஜோடி அடக்கும் சாகசத்தையும் இந்த கதையில் ரசிக்கலாம்.

அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது இரும்புக் கை நாமனின் ரீ என்ட்ரி. ஆம், சுமார் ஐந்து வருடங்கள் கழித்து இரும்புக் கை நார்மனின் கதை வந்தது. எனக்கு மிகவும் பிடித்த கதை நாயகன் இவர். இவரின் முதல் கதையை படித்து விட்டு நான் சிறுவயதில் அழுதது கூட உண்டாம். இந்த இரண்டாவது கதையில் இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருக்கும்போது ஹிட்லரைப்போலவே ஒருவர் இருப்பதை நேசநாடுகள் கண்டுபிடிப்பார்கள் (போலி ஹிட்லர்). அந்த போலி ஹிட்லரை பத்திரமாக கொணரும் பொறுப்பினை நார்மனிடம் ஒப்படைப்பார்கள். நகைச்சுவையோடு சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட இந்த கதை அருமையான ஒன்று.

லயன் காமிக்ஸ் - இரும்பிக் கை நார்மன் சாகசம் - மரணத்தின் நிழலில்- இரண்டாவது கதை

075 Maranathin Nizhalil Cover

மின்னல் படையினரை யாரால் மறக்க முடியும்? இவர்களின் படையை பற்றிய முழுமையான விவரங்களுக்கு வேண்டப்படாத நண்பர் (வேண்டப்பட்ட விரோதியின் எதிர்ப்பதம்) பயங்கரவாதி டாக்டர் செவனின் இந்த பதிவினைப் படிக்கவும்.

மாகக் கோட்டை மர்மம்: ஹிட்லருக்கு ஆல்ப்ஸ் மலையில் ஒரு ரகசிய மறைவிடம் இருப்பதை கண்டறியும் நேசநாடுகள் அதனை ஒழிக்கும் பொறுப்பை மின்னல் படையிடம் ஒப்படைப்பார்கள். அந்த சாகசம் இந்த இதழில் உள்ளது. 

எஜன்ட் ஈகிள்:அடுத்தபடியாக லயன் காமிக்ஸ் விபரீத விதவை இதழில் பக்க நிரப்பியாக ஒரு கதை இருந்தது. அற்புதமான ஹீரோ ஒருவரைப்பற்றிய கதை அது. இங்கிலாந்து கதைகளை ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் இந்த கதையை பற்றி மனிக்கனக்கில் சிலாகிப்பார்கள். அத்துணை அருமையான கதை வரிசை அது. முடிந்தால் படித்துப் பாருங்கள். நீங்களும் ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

லயன் காமிக்ஸ் - மேகக்கோட்டை மர்மம் - மின்னல் படையினர் சாகசம்

எஜன்ட் ஈகிள் - ஒருமுறை மட்டுமே வந்த சாகசம்

Lion Comics No.125 - Mega-k-Kottai Marmam - Cover  LionComicsNo.125MegakKottaiMarmamPag[1] lion Comics Issue 113 June 1995 Vibareedha Vidhavai War Story Agent Nelson Fleetway Original

என்னால் மறக்கவே முடியாத காமிக்ஸ் ஹீரோக்களில் ஒருவர் இரும்புக் கை நார்மன். அவரின் முதல் கதையாகிய மனித எரிமலையை படித்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அடுத்து அவரது இரத்தக் கண்ணீர் கதை கண்ணில் உண்மையிலேயே இரத்தக் கண்ணீரை வரவழைக்கும்.

இரும்புக் கை நார்மன் - முதல் கதை விளம்பரம்

இரும்புக் கை நார்மன் - முதல் கதை விளம்பரம்

Editor S Vijayan's Tour 1 Lion Comics Issue No 20 Africa Sahi Intro Norman_thumb[1] Editor S Vijayan's Tour 1 Lion Comics Issue No 20 Africa Sathi Intro Norman 2_thumb[2]

இந்த அட்டைப்படம் ஒரு சூப்பர் படைப்பாகும். அந்த நாட்களில் இரும்புக்கை மாயாவி மோகம் தலைவிரித்தாடிய காலம். இரும்புக் கையுடன் ஒரு ஹீரோ கிடைத்தாலே போதும், புகுந்து விளையாடுவார்கள் நமது காமிக்ஸ் எடிட்டர்கள். இப்படியாக வந்த காமிக்ஸ் ஹீரோக்களில் ஒருவர்தான் இவர் (என்று சொல்ல ஆசை) ஆனால் உண்மையில் ஒரு உணர்ச்சிபூர்வமான கதை இது. படிக்கதவராதீர்கள்.

இரும்புக் கை நார்மன்- மனித எரிமலை

லயன் தீபாவளி மலர் - நார்மன் அட்டையில்

Lion#021 - Manidha Erimalai_thumb[2] Lion031DeepavaliMalar86_thumb4

ஒரு காலகட்டத்தில் விளம்பரங்களின் மூலம் ஆர்வத்தினை தூண்டி நம்மையெல்லாம் வாங்க வைத்தார் எடிட்டர் விஜயன் சார். இப்போது? எங்க வைக்கும் படங்கள் இவை.

நார்மன் கதை விளம்பரம்  - இரத்தக் கண்ணீர்

நார்மன் கதை விளம்பரம் -பனிமலையில் ஒரு கொலை 

DiwaliMalar1987Ad1_thumb2 KodaiMala61986Ad2_thumb2

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Related Posts with Thumbnails